தமிழகத்தில் கூடுதல் மாவட்டங்களில் பேருந்து சேவைகள்? அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் கூடுதல் மாவட்டங்களில் பேருந்து சேவைகள்? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கூடுதல் மாவட்டங்களில் பேருந்து சேவைகள்? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கூடுதல் மாவட்டங்களில் பேருந்து சேவைகள்? அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருவதால் அரசு புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் இயக்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 14 வரை தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

தமிழகத்தில் துணை மருத்துவ பயிற்சி மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதன் பின்னர் கொரோனா பரவல் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு பகுதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதில் பிரிவு ஒன்றில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அங்கு எந்தவித கூடுதல் தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு ஜூன் 28 வரை நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் பிரிவு இரண்டில் இடம் பெற்றுள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதல் நேர தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரிவு மூன்றில் இடம் பெற்ற, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும், 50 சதவீத பயணியருடன் அரசு பஸ்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதன் படி சென்னையில் பெரிய கடைகள் தவிர, அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. அதனால் மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக உள்ளது. நேற்று முதல் அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன. தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன. இந்நிலையில் இவ்வாறு பிரிக்கப்பட்டு வழங்கப்பட தளர்வுகளில் சில குழப்பங்கள் எழுந்துள்ளன.

கடைகள் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, இரவு 9:00 மணி வரை, மாலை 5:00 மணி வரை என நேரம் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் நடுவே குழப்பம் எழுந்துள்ளது. அனைத்து கடைகளும் ஒரே நேரத்தில் திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் பிரிவில் உள்ள மாவட்டங்களில் வழங்கப்பட்ட தளர்வுகளில் அரசு பஸ், கால் டாக்சி, ஆட்டோ போன்றவற்றில் செல்ல இ-பதிவு தேவையில்லை. ஆனால் இரு சக்கர வாகனங்களில் செல்ல இ-பதிவு தேவைப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

கொரோனா பரவல் குறைவாக உள்ளதால் இந்த மாவட்டங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பெரம்பலுாரில் 37; திருநெல்வேலியில் 45; ராமநாதபுரத்தில் 49; தென்காசியில் 51 என நேற்று 12 மாவட்டங்களில், நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100க்கு கீழ் குறைந்துள்ளது. ஆனால் இந்த மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து ஏன் அனுமதிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே அரசு அறிவித்துள்ள தளர்வுகளை மறு பரிசீலனை செய்து அனைவருக்கும் சமமான தளர்வுகள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!