தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று முதல் பேருந்து சேவை – பொதுமக்கள் நிம்மதி!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் 27 மாவட்டங்களில் 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளன. அதன்படி தமிழகத்தில் 9,333 அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
பேருந்து சேவைகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் விளைவாக கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அமல்!
அதன்படி ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டதை தொடர்ந்து, அரியலூர், கடலூர், தருமபுரி,திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை,இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்,திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 50 சதவிகித பயணிகள் அமர்ந்தபடி பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.
TN Job “FB
Group” Join Now
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள மொத்தம் 19,290 பேருந்துகளில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,200 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 365, விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,210, சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 513 , கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,592, மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,300 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1753 பேருந்துகள் என மொத்தமாக 9,333 பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளன. பேருந்துகளில் மக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளி ஆகிய கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.