பேருந்து, ரிக்‌ஷா, டாக்சி டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு – மே 1 முதல் அமல்! அரசு அதிரடி நடவடிக்கை!

0
பேருந்து, ரிக்‌ஷா, டாக்சி டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு - மே 1 முதல் அமல்! அரசு அதிரடி நடவடிக்கை!
பேருந்து, ரிக்‌ஷா, டாக்சி டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு - மே 1 முதல் அமல்! அரசு அதிரடி நடவடிக்கை!
பேருந்து, ரிக்‌ஷா, டாக்சி டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு – மே 1 முதல் அமல்! அரசு அதிரடி நடவடிக்கை!

கேரளா மாநிலத்தில் பேருந்துகள், ஆட்டோரிக்‌ஷாக்கள், டாக்சிகள் மற்றும் குவாட்ரிசைக்கிள்கள் போன்றவற்றில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்டண உயர்வு:

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தும் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் பேருந்துகள், ஆட்டோரிக்‌ஷாக்கள், டாக்சிகள் மற்றும் குவாட்ரிசைக்கிள்கள் போன்றவற்றில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்த கேரளா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

அந்த வகையில் இது குறித்து நேற்று (ஏப்ரல்.13) வெளியான அறிவிப்பில் கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி ராஜு, சமீபத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணம் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து கட்டண உயர்வை அமல்படுத்துவதற்கான உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அடுத்த மாதம் முதல் இந்த கட்டணம் உயர்த்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்போது கேரளாவில் பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வை தொடர்ந்து மாணவர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆராய ஆணைக்குழுவை நியமிக்க உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இப்போது, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 8 ரூபாயில் இருந்து 10 ரூபாயாகவும், கிலோமீட்டருக்கு 90 பைசாவில் இருந்து 1 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்துள்ளதாக கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசு கூறியுள்ளது. மேலும், குறைந்தபட்சக் கட்டணத்தை 8 ரூபாயில் இருந்து 12 ரூபாயாகவும், கிலோ மீட்டருக்கான கட்டணத்தை 90 பைசாவிலிருந்து 1.10 ரூபாயாகவும் உயர்த்துமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குறைந்தபட்ச மாணவர் கட்டணத்தை 6 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே போல குறைந்தபட்ச ஆட்டோ கட்டணத்தை, ஒன்றரை கிலோ மீட்டருக்கு 25 ரூபாயாக இருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு 30 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்தது. அதன்பிறகு, ஒரு கிலோ மீட்டருக்கு தற்போதுள்ள ரூ.12 என்ற கட்டணம் இனி ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15 ஆக வசூலிக்கப்பட உள்ளது. தொடர்ந்து டாக்ஸி கட்டணம், 1,500 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்களுக்கு, 1 முதல் 5 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமாக 175 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் பிறகு, ஒரு கி.மீ.க்கு 15 ரூபாய் என்ற விகிதத்தில் இருந்து அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!

அதே வேளையில் 1,500 சிசிக்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட வாகனங்களுக்கு, 1 முதல் 5 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டு, அதன்பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் நடைமுறையில் உள்ள கட்டணத்தின்படி ரூ.20 வசூலிக்கப்படும் என்றும் ஒரு கி.மீ.க்கு 17 ரூபாய் என்றும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், குவாட்ரிசைக்கிள்களின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.35 ஆக உயர்த்தப்படும் என்றும், கிலோ மீட்டருக்கு ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!