தமிழகத்தில் பேருந்து பயண கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பேருந்து கட்டணம் தற்போதைக்கு உயர்த்தப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் பேருந்து நிலையங்களில் மீண்டும் அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
பேருந்து கட்டணம்:
தமிழகத்தில் திமுக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரம் பெற்றது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது முக ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்றான அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களுக்கும் இந்த திட்டம் ஒரு முன்னோடியாக உள்ளது.
தமிழகத்தில் செப். 1 முதல் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் துவக்கம்? அமைச்சர் விளக்கம்!
மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பு வந்த நாள் முதல், அரசு நகர பேருந்துகளில் அதிக அளவு பெண்கள் பயணம் செய்வதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் அரசுக்கு 1,358 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நகர பேருந்துகளில் செல்லும் பெண்களின் சதவீதம் 40 லிருந்து 60 ஆக உயர்ந்துள்ளது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்து வருகிறது. போக்குவரத்து துறையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர், தமிழகத்தில் தற்போதைக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார். மேலும் பேருந்து நிலையங்களில் அம்மா குடிநீர் பாட்டில்களை மீண்டும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து வண்டலூர் அருகே கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் இந்த ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.