வரும் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட் அறிவிப்பு இதுதானா? – வெளியான தகவல்!
பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று என்ன அறிவிப்பு வெளியாக போகிறது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
மத்திய பட்ஜெட்:
ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட் நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டு செய்யும். ஏனெனில் அந்த ஆண்டின் வரவு செலவு முழுவதும் அந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை பொறுத்தே அமையும். இது போக சில சிறப்பு அறிவிப்புகள் பட்ஜெட்டின் போது வெளியிடப்படும்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் இன்னும் சில தினங்களில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டிற்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் பேக்டர் விகிதம் 2.6 சதவீதமாக உள்ளது.
மக்களே முன்னேற்பாடு அவசியம்.. நாளை மறுநாள் தமிழகத்தில் மின்தடை – TANGEDCO அறிவிப்பு!
இதை 3.7 சதவீதமாக கூட்ட வேண்டும் என ஊழியர்கள் அரசுக்கு பல காலமாக கோரிக்கை வைத்துள்ளனர். பட்ஜெட்டிற்கு பிறகு இந்த விகிதம் இவ்வாறு உயர்த்தப்பட்டால் அடிப்படை ஊதியம் ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயரும் என கூறப்படுகிறது. எனவே வரப்போகும் பட்ஜெட் கூட்ட தொடரை அரசு ஊழியர்கள் அதிகம் எதிர்பார்த்து உள்ளனர்.