நாட்டில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் – பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள்!!
தற்போது வேலைவாய்ப்பு குறைந்து கொண்டு வருவதால் இளைஞர்களுக்கு உதவும் வகையில், பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு:
நாட்டில் தற்போது வேலைவாய்ப்பின்மையை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகள் குறித்து நிதியமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சிக்காக PMKVY 4.0 தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதில், AI, Robotics, Coding ஆகியவை கற்பிக்கப்படும் என்று கூறியுள்ளார். அத்துடன், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், 50 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசு சார்பாக உதவி வழங்கப்படும். இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதே போன்று விவசாயிகளுக்கு உதவும் வகையில், வேளாண் தொடக்கங்களை ஊக்குவிக்க வேளாண் ஊக்க நிதி அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போக்குவரத்து துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் வகையில், 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்டுகள் புனரமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.