பட்ஜெட் 2023: PPF திட்டத்தில் உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு? நிதியமைச்சர் வெளியிட இருக்கும் அறிவிப்பு!!
அஞ்சல் அலுவலகத்தில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தற்போது அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த அதிகபட்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்த நிதி அமைச்சருக்கு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, வருகிற பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் Budget தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு, வீட்டு கடன், தனிநபருக்கான கடன் ஆகியவற்றில் பல்வேறு சலுகைகளை சாமானிய மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பை சரிபார்க்க புதிய வசதி – மின்சார வாரியம் அறிமுகம்!
இந்த நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த அதிகபட்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என நிதி அமைச்சரிடம் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் அமைப்பான ICAI நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. இவ்வாறு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டால் சுயதொழில் செய்பவர்களுக்கு பெரிதும் லாபத்தை கொடுக்கும்.
அதன்படி இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.1.33 கோடி வரை சேமிக்கலாம். அதாவது, நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தில் (PPF) ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் 20 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். இப்போது முதிர்வு காலத்தின் முடிவில் 7.1% வட்டியுடன் உங்களுக்கு ரூ.1.33 கோடி கிடைக்கும். இந்த திட்டத்தில் இவ்வாறு முதலீடு செய்வதால் முதிர்வு காலத்தின் முடிவில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்.