பி.டெக் மாணவர்கள் ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்கலாம் – ஏஐசிடிஇ அனுமதி!
புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அறிவுறுத்தலின் படி, உயர் கல்வியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. பி. டெக் படிக்கும் மாணவர்களை பொறியியல் படிப்பில் சேர்த்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.
ஏஐசிடிஇ அறிவிப்பு:
புதிய தேசிய கல்வி கொள்கை (என்இபி 2020) கடந்த ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டில் (1986 இல் மாற்றியமைக்கப்பட்டது) மற்றும் 1992க்குப் பிறகு இது மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையாகும். இந்தக் கொள்கை 21 ஆம் நூற்றாண்டில் முதல் NEP ஐக் குறித்தது. மேலும் இது தற்போதைய கல்வி முறைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. புதிய தலைமுறை மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்குவதற்காக இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கடும் காய்ச்சல், தொண்டை வலி – ரசிகர்கள் ஷாக்!
பள்ளிக்கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியில் பல மாற்றங்களையும் அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது. அதிலும், உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பாடத்திட்டம் போன்றவற்றில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கல்வி கொள்கை கொண்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் தான் பொறியியல் கல்வி உள்ளது. இந்நிலையில் ஏஐசிடிஇ, பிடெக் மாணவர்கள் ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பப் பல்கலைக்கழங்கள் பிடெக் படிக்கும் மாணவர்களை, லேட்டரல் என்ட்ரி அடிப்படையில் தகுதியான பொறியியல் பிரிவில் சேர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. ஏஐசிடிஇ நிர்வாகக் குழுவில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் அதே குறிப்பிட்ட பாடப்பிரிவை முன்னதாக எடுத்து படிக்க வேண்டியதில்லை. ஏஐசிடிஇ அறிவித்துள்ள இந்த மாற்றங்களை கல்வி நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.