BSNL பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிப்பு!
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL அதன் ரூ.699 ப்ரீபெய்ட் பிளானின் வேலிடிட்டியை கூடுதலாக 20 நாட்கள் அதிகரித்துள்ளது. இது BSNL வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகையாக உள்ளது.
BSNL :
இந்தியாவில் கடந்த வருடம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்காக பல புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது வீட்டிலிருந்து பணி புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் பெரும்பாலும் தங்களின் மொபைல் இன்டர்நெட்டை பயன்படுத்தி தான் கம்பியூட்டர், லேப்டாப் போன்ற சாதனங்களில் பணி செய்து வருகின்றனர். இவர்களுகாக நெட் ஒர்க் நிறுவனங்கள் மலிவு விலையில் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
SBI வங்கியில் 567 காலிப்பணியிடங்கள் – சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி & விண்ணப்ப முறை!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நெட் ஒர்க் நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி வரை டேட்டா பிளான்களை வழங்கிறது. மேலும் ஜியோவின் விலை உயர்ந்த திட்டமான ரூ.3,499 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வருடம் முழுவதும் வழங்குகிறது. மற்ற நிறுவனங்களை தொடர்ந்து அரசு நிறுவனமான BSNL ரூ.699 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டியை அதிகரித்துள்ளது. அதன்படி 160 நாட்கள் என்கிற வேலிடிட்டியை கூடுதலாக 20 நாட்கள் அதிகரித்துள்ளது.
தமிழக பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 30% ஊதிய உயர்வு – அமைச்சர் பேட்டி!
ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிட்டட் காலிங், இது தினசரி 0.5 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற அம்சங்கள் உள்ளது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா முடிவடைந்த பிறகு இன்டர்நெட் வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும். மேலும் இந்த 699 பிளான் செப்டம்பர் 28 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த திட்டம் டிசம்பர் 27 வரை தொடரும் என்று BSNL அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்க தக்கது.