BSNL ப்ரீபெய்டு Broadband திட்டம் நிறுத்தம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான BSNL ப்ரீபெய்டு பிராட்பேண்ட் திட்டங்களை நிறுத்தி வாடிக்கையாளர்களுக்கு போஸ்ட்பெய்ட் திட்டங்கள் மட்டுமே வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
BSNL திட்டம்:
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான BSNL தற்போது வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான சலுகைகளை வழங்கி வருகிறது. பல்வேறு சலுகைகளுடன் பிராட்பேண்ட் துறையிலும் கலக்கி வருகிறது BSNL நிறுவனம். தற்போது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. BSNL அதன் அனைத்து ப்ரீ-பெய்டு பிராட்பேண்ட் திட்டங்களை நிறுத்தி வாடிக்கையாளர்களுக்கு போஸ்ட்பெய்ட் திட்டங்கள் மட்டுமே வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 1,400 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!
ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது. BSNL பிராட்பேண்ட் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதன் காரணமாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. BSNL பிராட்பேண்ட் அனைத்து முன்-கட்டண வாடிக்கையாளர்களையும் போஸ்ட்பெய்டுக்கு மாற்ற தயாராகி வருவதாகவும் வாடிக்கையாளர்களை கவர, நிறுவனம் ரூ .600 தள்ளுபடி சலுகையையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசு!
BSNL நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது 1,498 ரூபாய்க்கான திட்டமாகும். இதில் தினசரி 2 ஜிபி டேட்டா என 365 நாட்களுக்கு வழங்கி வருகிறது. இதில் முன்-கட்டணத் திட்டத்தை தவிர, நிறுவனம் ஒரு விளம்பர சலுகையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த திட்டமானது 90 நாட்கள் கூடுதலாக செல்லுபடியாகும். தினசரி டேட்டா அளவு முடிந்த பிறகு இணைய வேகம் 40 kbps என இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த சேவையானது சென்னை வட்டத்தில் மட்டும் காணப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அனைத்து பகுதிக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.