BRO 876 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி நாள்
சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) ஏற்பட்டுள்ள Store Keeper Technical மற்றும் Multi Skilled Worker ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 876 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட கால அவகாசம் நாளையுடன் (10.08.20222) முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
BRO வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான அறிவிப்பில், Store Keeper Technical மற்றும் Multi Skilled Worker (Driver Engine Static) ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 876 பணியிடங்கள் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு ஏற்ப ரூ.18,000/- முதல் ரூ.63,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Store Keeper Technical பணிக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் Multi Skilled Worker பணிக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 25 அல்லது 27 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது, கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Exam, Physical Efficiency Test மற்றும் Practical / Trade Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்கள்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.50/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BRO விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட காலை நேரம் நாளையுடன் (10.08.2022) முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.