சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1,000 – முதலமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த கனமழை காரணமாக தரங்கம்பாடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக முதல்வர் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக சென்னையை பொறுத்தவரை கனமழையானது விட்டு விட்டு பெய்து கொண்டு வந்தது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் சீர்காழியில் வெள்ளம் ஆர்ப்பரித்து, மழைநீர் கடல் வெள்ளம் போல ஓடுவதால் மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் மழை நீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடர் கனமழை காரணமாக இங்கு உள்ள விவசாய நிலத்தில் பயிர்கள் முழுவதும் சேதமடைந்துள்ளது.
மத்திய அரசு “இதற்கு” எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
இன்று தமிழக முதல்வர் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து தற்போது வெள்ள நிவாரணம் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அத்துடன் மழையினால் சேதம் அடைந்துள்ள பயிர்களை கணக்கீடு செய்து அதற்குத் தகுந்தவாறு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.