தமிழக அரசுப் பள்ளிகளில் இனிதே துவங்கிய ‘காலை உணவு திட்டம்’ – முதல்வர் ஸ்டாலின் உரை!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் செப். 15 ம் தேதியான இன்று முதல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம்:
தமிழக அரசு ஏழை எளிய குழந்தைகள் கல்வியை பாதியிலேயே நிறுத்தக் கூடாது என்பதற்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 15) துவக்கி வைத்தார். முதற்கட்டமாக மதுரை மாநகரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் பின் செப். 16 ஆம் தேதி முதல் மற்ற மாவட்டங்களில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டமானது மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – காலாண்டு தேர்வுக்குரிய பாடத்திட்டம் வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இன்று இந்த திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், பள்ளிக்கு படிக்க வரும் குழந்தைகள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்தினேன் என தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114- வது பிறந்தநாளையொட்டி இந்த திட்டமானது இன்று (செப். 15) தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் அந்த உணவை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு அதனை ஊட்டிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்