தமிழகத்தில் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 1 - 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 1 - 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் – முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு புதிய நலத்திட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

காலை சிற்றுண்டி:

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த மே மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது வழக்கம் போல 1 – 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட்டு வந்ததது. அதன் தொடர்ச்சியாக 11, 12ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்யும் பொருட்டு எண்ணும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதன் தொடர்ச்சியாக தற்போது 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்க்கனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் காலையிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிற்றுண்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பயில கூடிய மாணவர்கள் காலையில் விரைவாக பள்ளிக்கு செல்ல வேண்டியதால் காலையில் உணவு சாப்பிடுவது இல்லை என்று தகவல் வெளியானது. மேலும் பள்ளிக்கு வெகு தொலைவில் உள்ளதால் உரிய நேரத்தில் செல்ல காலை உணவை தவிர்த்து செல்வதாக கூறப்பட்டது. இத்தகைய நிலையில் பள்ளிகளிலேயே உணவு தர முடிவு செய்யப்பட்டு இந்த காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டது.

இனி அரசு பள்ளிகளில் வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை? முக்கிய தகவல் வெளியீடு!

தற்போது முதல் கட்டமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. அதன்படி தற்போது காலை சிற்றுண்டி திட்டம் 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட உள்ளது. இனி பள்ளிகளில் காலை 8.15 மணி முதல் 8.45 மணி வரை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுய உதவி குழுக்கள் மூலம் சிற்றுண்டி சமைத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விரைவில் தொடங்கிவைக்க உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!