தமிழகத்தில் 292 அரசு தொடக்க பள்ளிகளில் காலை சிற்றுண்டி – அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல சென்று வரும் நிலையில், 292 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விரைவில் காலை சிற்றுண்டி வழங்கப்பட இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலை சிற்றுண்டி:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பல திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் பள்ளிக்கு வர ஆர்வம் செலுத்த வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக நிதித்துறை செயலர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டம் தொடக்கம் – அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி!
அதில் தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராம பஞ்சாயத்துகளில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் பரிசோதனை முடிவில் மகளிர் சுயஉதவி குழுவினர் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட திட்ட இயக்குநர்களுக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மூலம் மகளிர் சுயஉதவி குழுக்கள் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்க வேண்டும்.
சமையல் செய்பவர்கள் உணவு தயாரிக்கும் வேலையில் குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவத்துடன் பள்ளியில் இருந்து 1 கி.மீ. சுற்றளவில் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை உணவானது அரிசி அல்லது சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் காலை 8.15 முதல் 8.45 மணிக்குள் சிற்றுண்டி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சமையல் செய்பவர்கள் வேலையை 7.45 மணிக்குள் முடிக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
பள்ளிகளில் சமையல் செய்பவர்களுக்கான அடுப்பு, சிலிண்டர், பாத்திரங்கள் ஆகியவை சமூகநலத் துறை மூலம் வழங்கப்படும் எனவும் மளிகை பொருட்கள், காய்கறிகளை ஆகியவை உள்ளூர் சந்தையில் வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சத்தான சிற்றுண்டி வழங்க ஒரு குழந்தைக்கு தினசரி ரூ.8.25 வீதம் தற்காலிகமாக அரசு ஒதுக்கி உள்ளது. மேலும் இந்த காலை உணவை சமைக்கும் சுயஉதவி குழுவினர்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்த முதற்கட்டமாக 292 தொடக்கப் பள்ளிகளின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்