தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி – புதிய அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி - புதிய அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி - புதிய அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி – புதிய அரசாணை வெளியீடு!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும்.1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக முக்கிய அரசாணை வெளியாகி உள்ளது.

அரசாணை வெளியீடு:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நான்கில் ஒரு மாணவர் வளர்ச்சிக் குறைபாடு கொண்டவராகவும், 2ல் ஒரு மாணவர் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவராக இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் உடல்நலத்தையும், கல்வி திறனையும் ஒருங்கே மேம்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பதை கல்வியாளர்கள் அரசுக்கு அறிவுறுத்தினர். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் எண்ணறிவு, எழுத்தறிவு பெறுவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை தடுக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னை: உச்சத்தை தொடும் ஆபரண தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை அண்மையில் வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியது.

Exams Daily Mobile App Download

முன்னதாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் சிற்றுண்டி திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல் காலை 7.45 மணிக்குள் சமையல் பணிகள் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிகள் மாணவர்கள் சோர்வுடன் இருக்க மாட்டார்கள் எனவும், மாணவர்கள் உடல் மற்றும் மனதளவில் வலிமையாக காணப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 1-5 ம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிற்றுண்டி வகைகளிலிருந்து ஏதாவது ஒரு சிற்றுண்டியினை அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் வழங்க வேண்டும், காலை உணவு திட்டத்தை கண்காணிக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!