தமிழகம் முழுவதும் மீண்டும் பேருந்து சேவை? மலிவு விலையில் குடிநீர் பாட்டில்!

0
தமிழகம் முழுவதும் மீண்டும் பேருந்து சேவை? மலிவு விலையில் குடிநீர் பாட்டில்!
தமிழகம் முழுவதும் மீண்டும் பேருந்து சேவை? மலிவு விலையில் குடிநீர் பாட்டில்!
தமிழகம் முழுவதும் மீண்டும் பேருந்து சேவை? மலிவு விலையில் குடிநீர் பாட்டில்!

கொரோனா ஊரடங்கு முடிந்து தமிழகம் முழுவதும் மீண்டும் பேருந்து சேவைகள் துவங்கியவுடன், முந்தைய அரசு அறிமுகப்படுத்திய மலிவு விலையில் குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டத்தை மீண்டுமாக துவங்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குடிநீர் திட்டம்:

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அம்மா குடிநீர் என்ற திட்டத்தை துவங்கி மலிவு விலையிலான தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்து வந்தது. அந்த வகையில் அனைத்து மாநகர மற்றும் நகர பேருந்து நிலையங்களிலும், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மாநில அரசுக்கு வருவாயும் அதிகரித்தது.

TN Job “FB  Group” Join Now

இதை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியமைத்த போது, மலிவு விலையில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்த திட்டமானது கட்சியிலிருந்த அமைச்சர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டால் நிறுத்தப்பட்டது என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ள திமுக அரசு, இந்த மலிவு விலை குடிநீர் வழங்கும் திட்டத்தை மீண்டும் துவங்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய ஐடி ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – க்ரீன் கார்டு தளர்வுகள்!

இதற்கு முன்னதாக கூட அதிமுக ஆட்சியில் செயல்பட்டு வந்த அம்மா உணவகங்கள் மீண்டும் இயங்குவதற்கு திமுக தலைமையிலான அரசு அனுமதி கொடுத்தது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அம்மா குடிநீர் திட்டத்தை மீண்டுமாக துவங்க அரசு ஆலோசித்து வருவது வரவேற்கத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விநியோகம் செய்யப்படும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்களின் விலை 5 ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

18 மாவட்டங்களில் முழு ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு? மாநில அரசு குளறுபடி!

தகவல்கள் கூறுவதின் படி அரசு ஒருவேளை இந்த திட்டத்தை துவங்கினால், கட்சி சார்பில் எந்தவொரு புகைப்படமும், பெயரும் இல்லாதவாறு, ஒரு புதிய வகையில் துவங்கும் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிந்து மீண்டுமாக பேருந்து சேவைகள் துவங்கும் போது, இந்த மலிவு விலை குடிநீர் பாட்டில்களும் விற்பனைக்கு வரும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!