செப். 20 முதல் அனைத்து வயதினருக்கும் ‘பூஸ்டர் தடுப்பூசி’ – அமெரிக்க அரசு!
அமெரிக்க மக்கள் டெல்டா கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து முதல் இரண்டு டோஸ் செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதாக அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி:
கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை சந்தித்து வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்தது. மேலும் நோய்த்தொற்று பரவும் விகிதத்தை குறைக்க தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2ம் டோஸ் போடப்பட்டது. தற்போது டெல்டா வைரஸ் தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 23 க்கு மேல் முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் ஆலோசனை!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து தற்போது டெல்டா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்டா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு டெல்டா வைரஸ் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ‘பூஸ்டர் தடுப்பூசி’ போடுவதென அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசியானது போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி நாடு முழுவதும் செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, எட்டு மாதங்கள் நிறைவடைந்தவர்களால் மட்டுமே பூஸ்டர் டோஸ் போட முடியும். இருப்பினும் இந்த சூழ்நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதும் தேவையற்றது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.