தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பூஸ்டர் சிறப்பு முகாம்!

0
தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - பூஸ்டர் சிறப்பு முகாம்!
தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - பூஸ்டர் சிறப்பு முகாம்!
தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பூஸ்டர் சிறப்பு முகாம்!

தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தொற்று பரவல் அதிகரித்த நிலையில் இருப்பதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பூஸ்டர் தடுப்பூசி:

நாடு முழுவதும் சுமார் இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவிய நிலையில் இருந்து வருகிறது. இத்தகைய பெருந்தொற்றால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அதாவது கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் உருமாறிய கொரோனா வகைகள் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி 2 தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர். அவ்வாறு தடுப்பூசி செலுத்துவதற்கு வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் முகாம் நடத்தப்பட்டு வந்தது.

ஜனவரி 22 முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும் – அமைச்சர் உத்தரவு!

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வந்த கொரோனா தடுப்பூசி முகாம்கள் தற்போது சனிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து 15 வயது முதல் உள்ள பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மீண்டும் தீவிரமெடுத்து வரும் கொரோனா பெருந்தொற்று 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் பரவி வருவதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

அதன் அடிப்படையில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் வகையில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் முகாம் நடத்தப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து அவர் பேசுகையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் மட்டுமே உயிரிழப்புகள் குறைவாக உள்ளது என்றும், அனைவரும் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!