தமிழக பொது மக்களுக்கு ‘இது’ இலவசம் – அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!

0
தமிழக பொது மக்களுக்கு 'இது' இலவசம் - அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!
தமிழக பொது மக்களுக்கு 'இது' இலவசம் - அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!
தமிழக பொது மக்களுக்கு ‘இது’ இலவசம் – அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 95% பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 844 பேரும், செங்கல்பட்டில் 465, திருவள்ளூரில் 161 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,98,992 ஆக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் தொற்று பரவலை தவிர்க்க தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

IRCTC-ல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள்!

இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது பேசிய அவர் இன்று (ஜூலை 10) மட்டும் 1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. மேலும் அம்மாவட்டத்தில் 95 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் அமைச்சர் ஆய்வு பணியில் ஈடுபட்டார். இன்று பக்ரீத் பண்டிகை என்பதால் இஸ்லாமியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இன்னும் 10 நாட்களில் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் எனும் திட்டத்தை கொண்டு வருவோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரம் முடங்காமல் இருக்க தொழிலாளர்களுக்கு நிறுவன முதலாளிகள் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த வழிவகை செய்து கொள்ளுங்கள். மேலும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அத்துடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு வருகிறது. தற்போதைய சூழலில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!