ரயில்வே துறையில் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு போனஸ் – மத்திய அரசு ஒப்புதல்!
மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் ரயில்வே துறையில் பணிபுரியும் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11.56% பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
போனஸ் அறிவிப்பு
பொதுவாக மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு அரசுத்துறை ஊழியர்களுக்கும் கொடுக்கப்படும் பெருமளவு ஊதியத் தொகையுடன் அகவிலைப்படி, பயணப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவ கொடுப்பனவு என பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறைகள் இதோ!
இதற்காக தான் பலரும் அரசு வேலைக்காக வருடக்கணக்கில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ரயில்வே துறையில் உள்ள அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரயில்வே துறையில் அரசு தரும் போனஸ் தொகை இதுவரை அதிகாரிகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது.
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.1.5 கோடி வரை பெறலாம்!
இந்நிலையில் ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 78 நாட்களுக்கான ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள படி, அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதன் மூலம் சுமார் 11.56% ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.