அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஹாப்பி நியூஸ் – கேரள அரசு அதிரடி அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஹாப்பி நியூஸ் - கேரள அரசு அதிரடி அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஹாப்பி நியூஸ் - கேரள அரசு அதிரடி அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஹாப்பி நியூஸ் – கேரள அரசு அதிரடி அறிவிப்பு!

கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

ஓணம் பண்டிகை

கேரள மாநிலத்தில் பாரம்பரிய பண்டிகைகளில் ஓணம் பண்டிகை 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையானது ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய நாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருவார் என்பது ஐதீகம். இதற்காக இங்குள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையானது சாதி, மத பேதமின்றி அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படுகிறது.

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரம் இதோ!

இப்பண்டிகை நாட்களில் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி உள்ளிட்ட 64 வகையான உணவு வகைகளை சமைத்து வழிபடுவார்கள். இதே போல் அந்நாட்களில் கயிறு இழுத்தல், களறி, படகு போட்டிகள் நடைபெறும். இதையடுத்து கேரள மக்கள் சிறப்பாக கொண்டாட ஏதுவாக அரசு விடுமுறை அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கும் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், அரசு ஊழியர்களுக்கு ரூ.4 ஆயிரம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படாத அரசு ஊழியர்களுக்கு ரூ. 2,750 சிறப்பு பண்டிகை கால அலவன்ஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை கால முன்பணமாக அரசுதுறை ஊழியர்கள் ரூ.20 ஆயிரம் முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் பகுதி நேர ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் ரூ.6 ஆயிரம் முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!