BOI பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது!
மும்பையில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட ஒரு முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, பின்வரும் நிபந்தனைகளுடன் ஒப்பந்த அடிப்படையில் 3 வருட காலத்திற்கு தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவிக்கு ஆர்வமுள்ளவர்களை நியமிக்க புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03.10.2022 முதல் 17.10.2022 வரை தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
CTO காலிப்பணியிடங்கள்:
பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து Chief Technology Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
பேங்க் ஆப் இந்தியா வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 58 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
NALCO நிறுவனத்தில் ரூ.35 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
Chief Technology Officer கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து பொறியியல் பட்டதாரி அல்லது MCA அல்லது அதற்கு சமமான தகுதி உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
BOI தேர்வு செயல்முறை:
இந்த வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 100 மதிப்பெண்களுக்கு நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 17.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பம் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே தட்டச்சு செய்யப்பட வேண்டும். கையால் எழுதப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download BOI Notice
Download BOI Detailed Notification Pdf
Download BOI Application Form
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்