10,000 ஊழியர்களை பணிக்கு அமர்த்த திட்டம் – Boeing நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!
பிரபல விமான உற்பத்தி நிறுவனமான போயிங் தனது உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து நிறுவனத்தில் 10,000 புதிய ஊழியர்களை பணிக்கு அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
புதிய நியமனங்கள்:
உலகம் முழுவதும் கடந்த 2022ம் ஆண்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது. இந்த சூழலில் தொழில் துறையினர் கடும் சரிவை சந்தித்தனர். அதனால் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. டெக் நிறுவனங்கள், மெட்டா, அமேசான் உள்ளிட்ட பல நிறுவன ஊழியர்கள் தங்களின் வேலையை இழந்தனர்.
TANCET நுழைவுத்தேர்வு 2023 – MBA & MCA தேர்வர்களுக்கான சூப்பர் அறிவிப்பு!
தற்போது இந்த சூழ்நிலையை சரி செய்வதற்கான நடவடிக்கையை தொழில்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக உற்பத்தியை அதிகப்படுத்தி வருமானம் ஈட்ட திட்டமிட்டு வருகின்றனர். அதன் காரணமாக மீண்டும் புதிய ஊழியர்களை நியமித்து வருகின்றனர். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனமான போயிங் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
2023ம் ஆண்டு விமான உற்பத்தி எண்ணிக்கையை 400 முதல் 450 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து போயிங் நிறுவனம் நடப்பு ஆண்டு 10,000 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் ஏராளமானோர் வேலைவாய்ப்பை பெறும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கபடுகிறது.