குறைந்த விலையில் சொத்து வாங்க திட்டமிடுபவரா நீங்கள்? BOB சூப்பர் அறிவிப்பு!
பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா மெகா ஆன்லைன் ஏலம் நடத்துகிறது. இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சொத்துக்களை வாங்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பேங்க் ஆப் பரோடா:
சாதாரண மக்களின் அதிகபட்ச அசைய இருப்பது சொந்த வீடு மற்றும் நிலம் வாங்குவது. ஆனால் பொருளாதார நெருக்கடியில் அதற்கான வாய்ப்புகள் அமையாமல் போகிறது. ஆனால் சொந்தமாக வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்னும் பலரது கனவு தவிடுபொடியாகும். சொந்த வீடு மற்றும் நிலம் வாங்குவதை கனவாக கொண்டு உள்ளவர்களுக்காக பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda) மெகா ஆன்லைன் ஏலம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
CTET தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – நகரங்கள் அறிவிப்பு!
பேங்க் ஆப் பரோடா நடத்தும் இந்த மெகா ஆன்லைன் ஏலத்தில் ஏராளமான சொத்துக்கள் விற்பனைக்கு வருபவராக கூறப்படுகிறது. இந்த ஈழத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சொத்துக்களை வாங்கும் வாய்ப்பை பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் சொத்துக்களான வெகு சில நாட்களிலே தங்களுக்கு சொந்தமாகிவிடும் என பேங்க் ஆஃப் பரோடா மக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.
செப்.24ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர்!
இன்று நடைபெறும் ஆன்லைன் ஏலத்தில் மார்க்கெட் விலையை காட்டிலும் மிக குறைந்த விலைக்கு வீடு, நிலம் என பல்வேறு சொத்துக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த ஏலத்தில் வீடுகள், பிளாட்டுகள் , அலுவலக இடம் , நிலம் , தொழில்துறை சொத்துகள் முதலியன ஏலத்தில் பெற்றுக்கொள்ளலாம். சொத்து வாங்குவதற்கு எளிதாக கடன் வழங்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும். விருப்பமுள்ளவர்கள் https://ibapi.in/ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.