Bank of Baroda வங்கியில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!
பேங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள FLC Counsellor பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பேங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் FLC Counsellor பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கபட்டுள்ளது.
- Assistant Vice President பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Agriculture, Veterinary Science, Sociology, Psychology & Social work போன்ற பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் தேவையான அளவிற்கு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ரூ.18,000/- மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் இத்துடன் வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் (Interview) வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.