பொதுத்துறை வங்கியில் வேலை – ரூ.15,000/- சம்பளம் | அப்ளை பண்ணுங்க !
நாட்டிலுள்ள முக்கிய பொதுத்துறை வங்களில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது Business Correspondent Supervisor பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வெளியானது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுத்துறை வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
வங்கி துறையில் பணியாற்ற வேண்டும் என்ற விரும்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நாடு முழுவதும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் 100 காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு பிரிவில் குறைந்தது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியை இயக்க தெரிந்திருக்க வேண்டும். மேற்கூறப்பட்ட வங்கி பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக (Retired officer) இருக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இவ்வாறு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு அதிகபட்சமாக ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், உடனே கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.