ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – போர்டிங் பாய்ண்ட் மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம்!
ஐஆர்சிடிசி கணக்கு மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தேவைப்படும் நேரத்தில் தங்களின் போர்டிங் ஸ்டேஷனை மாற்றிக் கொள்ளும் வசதியை ஐஆர்சிடிசி வழங்கியுள்ளது. இந்த முறையில் அபராதம் விதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசி:
இந்தியாவில் பரவிய கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் அனைத்து துறைகளும் கடுமையான சரிவை சந்தித்தது. அந்த வகையில் மற்ற துறைகளை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையும் பாதிக்கப்பட்டது. தொற்று அச்சத்தால் பொது மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதை தடுக்க போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை இன்றி காணப்பட்டதால் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பலர் சிரமத்திற்குள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரயில்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
மத்திய அரசு படையினருக்கு வருடத்திற்கு 100 நாட்கள் விடுமுறை? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இந்த நேரத்தில் தொற்று முழுமையாக குறையாத நிலையில் ரயில்களில் கூட்ட நெரிசலை தடுக்க முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் வாயிலாக ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ரயில் பயணிகள் வீட்டிலிருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதில் கூடுதல் சலுகையாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் புக்கிங் செய்யப்பட்ட ரயில் நிலையத்திற்கு பதிலாக வேறு எந்த ரயில் நிலையத்தில் இருந்தும் பயணிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சில சூழ்நிலைகளில் திடீரென்று போர்டிங் ஸ்டேஷனை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அத்தகைய சூழலில் இந்த வசதியை பயணிகள் பின்பற்றலாம். மேலும் ஏஜென்சிகள் மூலமாக டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கும், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கும் மட்டுமே இந்த முறை செல்லுபடியாகும். போர்டிங் ஸ்டேஷனை மாற்ற விரும்பும் பயணிகள் 24 மணி நேரத்திற்குள் மாற்றத்தை செய்ய வேண்டும். இதற்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.