‘ஆல் பாஸ்’ அறிவிப்பு, தனி தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்ததை தொடர்ந்து சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து:
தமிழகத்தில் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தபட்டன. மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு மாணவர்கள் சிரமப்படாமல் இருக்க பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் அரசாணை பிறப்பித்தார். இந்த அறிவிப்பு தனி தேர்வர்களுக்கும், சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் அனைத்து பாடங்களையும் நடத்த வேண்டும் – ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!
இதுகுறித்து கோவை வித்யாவிகாசினி பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி கூறுகையில், “2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்திலும் தனி தேர்வர்களும், சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதினார்கள். ஆண்டு முழுவதும் படித்தாலும் இந்த மாணவர்கள் அனைத்து பாடங்களையும் மனதில் வைத்திருப்பது கடினமான ஒன்றாகும். எனவே தமிழக அரசு அறிவித்துள்ள ஆல் பாஸ் அறிவிப்பை இந்த மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்