கொரோனா தடுப்பூசி செலுத்திய 14 நாட்கள் கழித்து ரத்ததானம் – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
இன்று (ஜூன் 14) உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு ரத்ததானம் செலுத்திய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 14 நாட்களுக்கு பின் ரத்ததானம் கொடுக்கலாம் என கூறியுள்ளார்.
தடுப்பூசிக்கு பின் ரத்ததானம்
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல தடுப்பு நடவடிக்கைகளில் மிக முக்கியமானது தடுப்பூசிகள் தான். இந்தியா அளவில் கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி செலுத்திய பின்னும் முகக்கவசங்களை அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் ஜூன் 16ம் தேதி முதல் திறப்பு – தொல்லியல் துறை அறிவிப்பு!!
இது தவிர கர்ப்பகாலத்தில் பெண்கள் தடுப்பூசிகளை எடுத்து கொள்ளலாமா, இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா என் பல சந்தேகங்கள் மக்களிடையே இன்னும் இருந்து வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 14 நாட்கள் கழித்து ரத்ததானம் செய்யலாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
முன்னதாக உலக ரத்த தான தினத்தை (ஜூன் 14) ஒட்டி, சென்னை அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் பொது மக்கள் அனைவரும் அச்சமின்றி ரத்ததானம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், ஒருவர் தடுப்பூசி போடுவதற்கு முன்பும் எவ்வித பயமும் இல்லாமல் ரத்ததானம் செய்யலாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.