தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினை தொடர்ந்து கருப்பு பூஞ்சை என்னும் வகை நோய் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது அதன் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை:
தமிழகத்தில் கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக தாக்கம் செலுத்தி வந்த கொரோனா நோய் தொற்று தற்போது வீரியம் குறைந்து காணப்படுகிறது. அதன்படி கடந்த மே மாத தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் குறைவாக காணப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்றினை தொடர்ந்து தமிழகத்தில் கருப்பு பூஞ்சை என்னும் வகை நோய் வேகமெடுத்து வருகிறது.
ஜூலை மாதம் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 700 க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் நலவாழ்வு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் வீட்டு தனிமையில் இருப்பவர்களின் ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இரவு உணவிற்கு முன்பு கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கணக்கிட வேண்டும். சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு ஸ்டீராய்டு உடன் ஆக்சிஜன் மற்றும் இன்சுலின் செலுத்த வேண்டும். 3 வேலை உணவிற்கு முன்பு கட்டாயம் இன்சுலின் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு 400க்கும் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு 5 யூனிட் என்ற அளவில் இன்சுலின் செலுத்த வேண்டும் என்றும் நோயாளிகளை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஸ்டீராய்டு எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு அதிக அளவில் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதால் சிகிச்சையில் இன்சுலினை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.