தமிழகத்தில் 518 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு – நாளை முதல் கொரோனா தடுப்பூசி பணிகள் துவக்கம்!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றினை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை என்னும் கொடிய நோய் பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் கருப்பு பூஞ்சை ஏற்படுத்திய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
கருப்பு பூஞ்சை:
தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை மேலும் பாதிப்படைய செய்யும் வகையில் கருப்பு பூஞ்சை என்னும் நோய் கடந்த சில தினங்களாகவே அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக சுகாதாரத்துறையினர் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கருப்பு பூஞ்சை குறித்து மக்களுக்கு விளக்கமளித்தும் வருகின்றனர். தற்போது சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்தார்.
மே மாதத்தில் சரிந்த பெட்ரோல், டீசல் விற்பனை – முழு ஊரடங்கு எதிரொலி!!
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது வரை 518 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி கருப்பு பூஞ்சை நோயினால் 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் நாளை முதல் தடுப்பூசி பணிகள் மீண்டும் தொடங்கும் என்று அறிவித்தார். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக ஜூன் 3ம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என்று முன்பு அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு இன்று மாலை 5 மணி அளவில் 4.20 லட்ச கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இன்று மாலை தடுப்பூசிகள் சென்னைக்கு வந்த பின்பு உடனடியாக தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.