கோபிக்கு விவாகரத்து கொடுக்க மாட்டேன் என கைவிட்ட நீதிபதி – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்ய கோபி முயற்சித்து வருகிறார். இந்நிலையில் பாக்கியா விவாகரத்து தொடர்பான வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்வது போன்றும் கோபி அதிர்ச்சி அடைவது போன்றும் புரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. என்னதான் பாக்கியா கோபியை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாலும் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென கோபி துடித்துக் கொண்டிருக்கிறார். தனது கண்ணுக்கு முன்னால் தவறு செய்தும் கூட கோபியின் மீது பாக்கியா அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்.
துர்காவை திருமணம் செய்து கொள்ளும் வெண்பா – மகிழ்ச்சியில் ஷர்மிளா! சீரியலில் அடுத்த திருப்பம்!
பாக்கியாவை விவாகரத்து செய்ய சமீபத்தில்கூட பாக்கியாவிற்கு தெரியாமலேயே விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி நீதிமன்றம் வரைக்கும் அழைத்து சென்றார். இதற்குப் பிறகு நீதிமன்றத்தில் அந்த கேஸ் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு நடுவே ராதிகாவும், பாக்கியாவும் சிறந்த நண்பர்களாக இருப்பதால் இருவருக்கும் உண்மைகள் தெரிய வர வாய்ப்பிருக்கிறது என இருவரையும் பிரிக்க திட்டம் போட்டு கொண்டிருந்தார். பின்பு கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் ராமமூர்த்தி தாத்தா அறிந்துகொள்கிறார்.
Exams Daily Mobile App Download
ராதிகாவிடம் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் சொல்லி விட வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதையும் கோபி எப்படியோ தடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்க பாக்கியா பாக்கியாவை உண்மையாகவே விவாகரத்து செய்து விடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாக்கியாவின் விவாகரத்து வழக்கு இத்தனை நாட்களாக நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கோபிக்கு விவாகரத்து கொடுக்க மாட்டேன் என நீதிபதி அந்த வழக்கை முடித்து விடுவது போன்றும், கோபி இதற்கு மேலும் எப்படி ராதிகாவை திருமணம் செய்வது என குழம்பி தவிக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.