குடித்து விட்டு ராதிகாவிடம் தகராறு செய்யும் கோபி? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
இதுவரை பாக்கியா மற்றும் ராதிகா என இரண்டு பக்கமும் கோல் அடித்து வந்த கோபி இப்போது முதல் முறையாக ராதிகாவின் சந்தேகத்திற்கு ஆளாகி இருக்கிறார். இந்த கதைக்களத்தில் கோபி குடித்து விட்டு ராதிகாவிடம் தகராறு செய்வது போல அடுத்தகட்டம் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே இருக்கிறது. அதாவது, அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக கட்டிய மனைவியை விட்டு விட்டு காதலியுடன் செல்ல நினைக்கும் கோபி இப்போது நடுத்தெருவில் நிற்கிறார். இதுவரை ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் காதலி ராதிகாவுக்காக தன் சொந்த குடும்பத்தையே தூக்கி எறிய நினைத்த கோபிக்கு இப்போது சரியான பதிலடி கிடைத்துள்ளது. அந்த வகையில், ராதிகா கோபியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று வற்புறுத்த அதற்கு கோபி மறுக்கிறார்.
இதனால், கோபமடையும் ராதிகா கோபியை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுகிறார். இப்போது, ராதிகாவால் துரத்தப்படும் கோபி ஆறுதல் தேடி நண்பர் செந்திலை பார்க்க செல்கிறார். அங்கு வைத்து மது அருந்தும் கோபி, என் குடும்பத்திற்கு வேண்டியதெல்லாம் நான் செய்து விட்டேன். என் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்து விட்டேன். பாக்கியாவுக்கு நான் இருந்தாலும் ஒன்று தான் இல்லை என்றாலும் ஒன்று தான். இனி என் வாழ்க்கையை நான் வாழ வேண்டும். எனக்கு ராதிகா தான் முக்கியம். அவளுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என புலம்புகிறார்.
Exams Daily Mobile App Download
இப்போது, ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்தில் மது அருந்தி இருக்கும் கோபி, ராதிகா மீதுள்ள மன வருத்தத்தில் அவரது வீட்டிற்கு சென்று குடி போதையில் கத்தி சண்டையிட்டு தனது நியாயத்தை கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அப்படி நடந்தால், ராஜேஷ் குடித்து விட்டு கலாட்டா செய்ததால் அவரை விவாகரத்து செய்த ராதிகா இப்போது கோபியையும் அதே கண்டிஷனில் பார்த்தால் என்ன முடிவு எடுப்பார் என்பது போலவும் அடுத்த கட்ட கதைக்களம் இருக்கலாம் என ரசிகர்கள் கணித்துள்ளனர்.