ராதிகா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் கோபி, மீண்டும் வந்த ராஜேஷ் – “பாக்கியலட்சுமி” அடுத்த வார எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா, கோபி தன்னுடைய குடும்பத்தை பற்றி பொய் சொன்னதை அடுத்து கோபி மீது கோவமாக இருக்கிறார். இந்நிலையில் அடுத்த வார எபிசோடில் கோபி ராதிகா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ:
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மையை தெரிந்து ராதிகா மிகவும் வருத்தப்படுகிறார். தன்னால் பாக்கியாவின் குடும்பத்திற்கு பிரச்சனை வேண்டாம் என ராதிகா நினைக்கிறார். ஆனால் கோபி ராதிகாவை பிரிய மனமில்லாமல் அடிக்கடி ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். ஆனால் ராதிகா கோபி மீது பயங்கர கோவத்தில் பேசி வெளியே போக சொல்கிறார். கோபிக்கு ராதிகா நடந்து கொள்வதை பார்த்து மனம் வருத்தம் வருகிறது.
இந்தியாவிலும் வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!
இந்நிலையில் ராதிகாவின் அம்மா மயூரா குரல் சோகமாக இருப்பதை பார்த்து வீட்டிற்கு வருகிறார். அவரிடம் ராதிகா உண்மையை சொல்ல ஆனால் கோபிக்கு ஆதரவாக தான் ராதிகாவின் அம்மா பேசுகிறார். பாக்கியாவை பற்றி நினைக்காமல் நீ உன் வாழ்க்கையை பார்க்க வேண்டும் என ராதிகாவின் அம்மா அறிவுரை சொல்கிறார். ஆனால் ராதிகா அதை கேட்பதாக இல்லை. இந்நிலையில் அடுத்த வார எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதில் கோபி மீண்டும் ராதிகா வீட்டிற்கு வர ராதிகாவிடம் பேச சொல்லி கெஞ்சுகிறார். அவருடைய அம்மா இருப்பதை கூட பார்க்காமல் ராதிகா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். ஆனாலும் ராதிகா கோபியை மன்னிக்காமல் அவரை பிடித்து இழுத்து சென்று வெளியே தள்ளுகிறார். அதனால் கோபி நிலைதடுமாறி விழ பார்க்கிறார். இனிமேல் இங்கே வராதீங்க என சொல்ல ராஜேஷ் அவரை ரோட்டில் இருந்து பார்க்கிறார். இனிமேல் உள்ளே வர முயற்சி செய்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என ராதிகா சொல்கிறார்.