தொழிலை தொடங்குவது பற்றி பாக்கியா கணவரிடம் பேச முடிவு செய்த ராதிகா, அதிர்ச்சியில் கோபி – இன்றைய எபிசோட்!

0
தொழிலை தொடங்குவது பற்றி பாக்கியா கணவரிடம் பேச முடிவு செய்த ராதிகா, அதிர்ச்சியில் கோபி - இன்றைய எபிசோட்!
தொழிலை தொடங்குவது பற்றி பாக்கியா கணவரிடம் பேச முடிவு செய்த ராதிகா, அதிர்ச்சியில் கோபி - இன்றைய எபிசோட்!
தொழிலை தொடங்குவது பற்றி பாக்கியா கணவரிடம் பேச முடிவு செய்த ராதிகா, அதிர்ச்சியில் கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா தன்னுடைய அலுவலகத்தை மூடிவிட்டு வருத்தப்பட்டு இருக்கிறார். வீட்டிற்கு போக மனமில்லாமல் நடந்து செல்ல அப்போது ராதிகா போன் செய்து உங்களை பார்க்கலாமா என கேட்கிறார். அருகில் இருக்கும் கோவிலுக்கு வாங்க உங்களிடம் நேரில் பேச வேண்டும் என ராதிகா சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா அலுவலகத்தில் பொருள்களை எல்லாம் எடுத்து வைக்க செல்வி மசாலா பொருள்களை எல்லாம் என்ன செய்வது என கேட்கிறார். அப்போது பாக்கியா வீட்டு தேவைக்கு வைத்துக் கொள்ளலாம் என சொல்கிறார். பின் பாக்கியா கதவை மூட செல்வியை கட்டி பிடித்து அழுகிறார். செல்வி எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் அக்கா நீ கவலைப்படாதே என சொல்ல அலுவலகத்தை சுற்றி பார்த்துவிட்டு பாக்கியா செல்வியை கிளம்பி செல்கிறார். பின் செல்வி நீ எங்கே போகிறாய் என கேட்க அப்போது பாக்கியா நான் நடந்து வருகிறேன் என சொல்கிறார்,

வெண்பாவை வெளியே கொண்டு வந்த ஷர்மிளா, ஹேமாவை சமாதானம் செய்யும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

பாக்கியா வருத்தப்பட்டு நடந்து கொண்டிருக்க அப்போது ராதிகா பாக்கியாவிற்கு போன் செய்கிறார். எப்படி இருக்கீங்க என ராதிகா கேட்க என்ன விஷயம் என பாக்கியா கேட்கிறார். அப்போது ராதிகா உங்களை நேரில் பார்க்க வேண்டும் நான் உங்களது அலுவலகத்திற்கு வரவா என கேட்கிறார். அப்போது பாக்கியா வேண்டாம் நான் வெளியே இருக்கிறேன் என சொல்ல, அப்போது ராதிகா பாக்கியாவை கோவிலுக்கு வாங்க என சொல்கிறார். பாக்கியா சரி என சொல்ல இருவரும் கோவிலில் மீட் செய்கின்றனர். ராதிகா பாக்கியாவை பார்த்ததும் கண் கலங்குகிறார்.

அப்போது பாக்கியா என்ன ஆச்சு என கேட்க நான் தான் உங்களை புரிந்து கொள்ளாமல் அப்படி பேசிவிட்டேன் என சொல்கிறார். அப்போது பாக்கியா அந்த சூழ்நிலையில் யாராக இருந்தாலும் அப்படி தான் பேசி இருப்பார் என சொல்கிறார். பின் ராதிகா உங்க மீது தவறு இல்லை என பின்னர் தான் எனக்கு தெரிந்தது என சொல்ல, பின் பாக்கியா நாங்க தவறு செய்ததாக வந்த போது எல்லா பேப்பரிலும் வந்தது. ஆனால் நான் தவறு செய்யவில்லை என நிரூபணம் ஆனது எந்த பேப்பரிலும் வரவில்லை என சொல்கிறார். அதனால் எல்லா வாடிக்கையாளர்களும் விட்டு போய்ட்டாங்க, அது மட்டுமில்லாமல் என் வீட்டில் பிசினஸ் செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டதாக சொல்கிறார்.

நீங்க அதற்கு ஒப்புக் கொண்டீர்களா என கேட்க ஆமாம் வேறு வழியில்லை என பாக்கியா சொல்கிறார். இதே இடத்தில் நாம பிசினஸ் பற்றி பேசினோம் ஆனால் இப்போது பிசினஸ் மூடியதை பற்றி பேசுகிறோம் என சொல்ல ராதிகா அதை கேட்டு வருத்தப்படுகிறார். பின் எல்லாம் சரியாகிவிடும் நீங்க என் வீட்டிற்கு வராதது தான் வருத்தம் எனக்கு அன்னைக்கு உங்களுக்கு நிறைய செய்து வைத்திருந்தேன் ஆனால் வர முடியாத சூழ்நிலை கண்டிப்பாக ஒரு நாள் வர வேண்டும் என பாக்கியா சொல்ல ராதிகா சரி என சொல்கிறார். பின் பாக்கியா கிளம்ப இரவு அனைவரும் சாப்பிட அமருகின்றனர்.

Exams Daily Mobile App Download

அப்போது எழில் தாத்தாவை அழைத்து வர இனியா அண்ணா உனக்கு தெரியுமா இனி அம்மா தொழில் செய்ய மாட்டேன் என முடிவு செய்துள்ளதாக சொல்கிறார். அதை கேட்டு எழில் கோவப்பட தாத்தா சாப்பிடமாட்டேன் என சொல்கிறார். ஈஸ்வரி சாப்பிடும் போது பிரச்சனை வேண்டாம் என சொல்கிறார். மறுநாள் அனைவரும் அலுவலகம் கிளம்பி விட எழில் பாக்கியாவிடம் வந்து எல்லாரும் சொல்லிட்டு கிளம்பிட்டாங்க ஆனால் நீ தான் இப்படியே இருக்க வேண்டும் என சொல்கிறார். ஆனால் பாக்கியா பதில் பேசாமல் இருக்கிறார். மறுபக்கம் கோபி ராதிகா வீட்டிற்கு போக அங்கே ராதிகா பாக்கியாவை பார்த்து பேசியதை சொல்கிறார். அவருடைய கணவர் தொழில் செய்ய வேண்டாம் என சொன்னதாக சொல்ல நாம சென்று அவரது கணவரிடம் பேசுவோமா என ராதிகா கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!