பாக்கியா சமைத்ததை சாப்பிட்டு உடம்பு சரியில்லாமல் போன குழந்தைகள், பதட்டத்தில் ராதிகா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா கோபியை அழைத்து கொண்டு பாக்கியா வீட்டிற்கு போவோம் என சொல்கிறார். பாக்கியா வீட்டில் ராதிகாவை வரவேற்க ஆவலுடன் உள்ள நிலையில், கோபி பாக்கியாவை வெளியே போக வைப்போம் என முயற்சி செய்கிறார். பின் பாக்கியா சமைத்த உணவை சாப்பிட குழந்தைகளுக்கு முடியாமல் போகிறது.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா குழந்தைகளுக்கு சாப்பாடு பரிமாறி சந்தோசப்படுகின்றனர். அப்போது ராதிகாவுக்கு கோபியுடன் இருப்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது. கோபி நான் உன் கூடவே இன்னைக்கு இருப்பேன் என சொல்கிறார். பின் கோபியை பாக்கியா வீட்டிற்கு ராதிகா கூப்பிட கோபிக்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். அப்போது ராதிகா கண்டிப்பாக போக வேண்டும் என சொல்ல கோபிக்கு என செய்வது என தெரியாமல் இருக்கிறது. ராதிகா பாக்கியாவிற்கு போன் செய்து நான் திருமணம் செய்து கொள்ள போறவருடன் உங்களது வீட்டிற்கு வர போகிறேன் என சொல்கிறார்.
அதை நினைத்து பாக்கியா சந்தோசமாக இருக்கிறார். செல்வியிடம் பாக்கியா ராதிகா வருவதாக சொல்ல ராதிகாவுக்கு ஸ்வீட் செய்கின்றனர். அப்போது ஈஸ்வரி வர அவரிடம் விவரத்தை பாக்கியா சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி ராதிகாவுக்கு இந்த வயதில் எதற்கு திருமணம் ஒழுங்காக மயூராவை வளர்க்கலாம் என சொல்கிறார். ஆனால் ஜெனி அவங்களும் பாவம் தான என சொல்கிறார். பின் என்னமோ நடக்கட்டும் வீட்டிற்கு முதன்முறையாக வருகிறார்கள் நாம கடமையை செய்வோம் என சொல்கிறார். கோபி மயூராவை ஸ்கூலில் இருந்து அழைத்து கொண்டு வர மயூரா இந்த ட்ரெஸ் உடன் எப்படி போவது என கேட்கிறார்.
அப்போது கோபி ஆமாம் அதனால் தான் வேண்டாம் என சொல்கிறேன் என சொல்ல, ராதிகா அதெல்லாம் ஒன்றுமில்லை இன்னைக்கு நீங்க டீச்சர் பார்க்க வர வேண்டும் என சொல்கிறார். பின் ராதிகா வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு இனிப்பு எதாவது வாங்க போகிறார். அப்போது கோபி பாக்கியாவிற்கு போன் செய்து வெளியே போக வேண்டும் என கிளம்ப சொல்கிறார். ஆனால் பாக்கியா ராதிகா வருவதாக சொல்லி வரவில்லை என சொல்கிறார். அதனால் கோபி இன்னைக்கு மாட்டிக் கொள்வோம் என நினைத்து வருத்தப்படுகிறார்.
பின் ராதிகா உடன் வந்து கொண்டிருக்க ராதிகாவுக்கு போன் வருகிறது, இப்போது சாப்பாடு கொடுத்த ஆசிரமத்தில் இருந்து தான் போன் வருகிறது என சொல்ல, அங்கே நீங்க கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு குழந்தைகளுக்கு உடம்பு சரி இல்லாமல் போனதாக சொல்கிறார். அதை கேட்டு ராதிகா பதறி போய் ஓடி வருகிறார். பின் செழியன் ஆபிஸ் கிளம்ப அவருக்கு நியூஸ் வந்துள்ளதாக போன் வருகிறது. அதில் குழந்தைகள் அனைவரும் முடியாமல் இருப்பதாக காட்டப்பட செழியன் பதட்டம் அடைகிறார். செழியன் கீழே வந்து பாக்கியாவிற்கு விவரத்தை சொல்ல பின் பாக்கியா அதை நினைத்து பதட்டம் அடைகிறார். பின் கோபி ராதிகா பதறி அடித்து அங்கே போக நீங்க கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு தான் குழந்தைகளுக்கு இப்படி ஆனது என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.