ராதிகாவுடன் கோபி இருப்பதை பார்த்து விட்ட செல்வி – பரிதாபமான பாக்கியாவின் வாழ்க்கை! ப்ரோமோ ரிலீஸ்!
ராதிகா கோபியை தான் திருமணம் செய்துகொள்ள போகிறாரோ என்கிற சந்தேகம் செல்விக்கு ஏற்கனவே இருந்தது. இந்நிலையில், ராதிகாவும் கோபியும் கோவிலில் ஒன்றாக இருப்பதை பார்த்து செல்வி திகைத்து நிற்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு எப்போது தான் அனைத்து உண்மைகளும் தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். கண்ணும் கருத்துமாக கவனித்து கொள்ளும் மனைவியை விட்டுவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொள்ள கோபி தயாராகி வருகிறார். ஏற்கனவே கோபி மீது செல்விக்கு சந்தேகம் இருக்கிறது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ லாஸ்லியாவிற்கு திருமணம்? வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
ஒரு முறை ராதிகாவின் வீட்டிற்கு வெளியே கோபியின் கார் நின்றதால் ராதிகாவை தான் கோபி திருமணம் செய்துகொள்ளப் போகிறாரோ என்கிற சந்தேகம் இருந்தது. அதனை பாக்கியாவிடம் சொல்லியும் பாக்கியா நம்பவில்லை. செல்வி மீது கோவப்பட்டு என் கணவனை பற்றி தவறாக பேசும் வேலை வச்சுக்க வேண்டாம் எனக் கூறி கண்டபடி திட்டுகிறார். தற்போது கூட பாக்கியாவை போலீசார் கைது செய்த போது உதவிக்கு வரவே இல்லை. குடும்பத்தில் உள்ள அனைவரும் கோபிக்கு கால் செய்த போது யாரின் காலையும் கோபி அட்டென்ட் செய்யவே இல்லை.
ExamsDaily Mobile App Download
இதன் பின்பு எதுவுமே நடக்காதது போல வீட்டிற்கு வருகிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் கோபியை கண்டபடி திட்டுகின்றனர். அப்போதும் செல்விக்கு கோபி மீது சந்தேகம் வருகிறது. இருப்பினும் தேவையில்லாமல் சந்தேகப்பட வேண்டாம் என சொல்லி அமைதியாக இருந்து விடுகிறார். பின்பு, ராதிகாவும் கோபியும் கோவிலில் ஒன்றாக இருப்பதை பார்த்து திகைத்து நிற்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. பாக்கியாவிடம் உண்மையை கூறுவாரா, அல்லது கோபியை கண்டிக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.