பாக்கியாவை வெளியில் கொண்டு வர எழிலின் பாசப்போராட்டம் – பேப்பரில் வந்த ராதிகா பெயர்! சீரியலில் அடுத்த திருப்பம்!

0
பாக்கியாவை வெளியில் கொண்டு வர எழிலின் பாசப்போராட்டம் - பேப்பரில் வந்த ராதிகா பெயர்! சீரியலில் அடுத்த திருப்பம்!
பாக்கியாவை வெளியில் கொண்டு வர எழிலின் பாசப்போராட்டம் - பேப்பரில் வந்த ராதிகா பெயர்! சீரியலில் அடுத்த திருப்பம்!
பாக்கியாவை வெளியில் கொண்டு வர எழிலின் பாசப்போராட்டம் – பேப்பரில் வந்த ராதிகா பெயர்! சீரியலில் அடுத்த திருப்பம்!

எழில் தனது அம்மா பாக்கியாவை காப்பற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் பாக்கியலட்சுமி சீரியலை பார்க்கும் பார்வையாளர்கள் மனதை குளிர வைத்துள்ளது. மேலும், ராதிகா தலையில் இடி விழுந்ததால் அடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகும் என்பதை இப்பதிவில் சுவாரசியம் குறையாமல் பார்ப்போம்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் முந்தைய எபிசோடில் ராதிகா தனது மகள் மயூ பிறந்தநாளுக்காக பாக்கியாவிடம் சமையல் ஆர்டர் கொடுத்ததையும், ஆசிரமத்தில் குழந்தைகள் மயங்கி விழுகிறார்கள் என்ற செய்தியை கேட்டு போலீஸ் விசாரித்த போது சாப்பாட்டில் தான் குறை என சொல்லி, காதலியை காப்பாற்ற நினைத்த கோபி தனது சொந்த மனைவியான பாக்கியாவை மாட்டிவிட்டு சிறைக்கு செல்ல வைத்ததையும் பார்த்தோம். அதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் எழில் தன்னுடைய அம்மாவை சிறையில் இருந்து மீட்டு உண்மையை வெளி கொண்டு வருவதற்காக இரவு, பகல் பாராமல் தெருத் தெருவாக அலைகிறான்.

மீண்டும் ஜெயிலுக்கு சென்ற வெண்பா – வேறு திருமணம் செய்யும்படி மிரட்டும் ஷர்மிளா! ப்ரோமோ ரிலீஸ்!

அப்போது சதீஷ் போன் செய்து ஏதாவது பாசிட்டிவாக நடந்ததா என்னாச்சு என கேட்க எழில் எதுவும் நடக்கல சாப்பாட்டை டெஸ்ட் செய்ய அலைந்து கொண்டு இருக்கிறேன். எங்கே போவது என்ன செய்வது என தெரியவில்லை எனக் கூறுகிறான். அதே சமயம் ஜானுவிடம் இருந்து அழைப்பு வர, அவளோ நான் அப்பாவிடம் பேசியிருக்கேன் இத பத்தி அதனால நான் சொல்ற முகவரிக்கு போயிட்டு அப்பாவோட பெயர் மட்டும் சொல்லு மத்தது எல்லாம் அவங்க பாத்துப்பாங்க என கூறினாள். உடனே எழிலும் அந்த இடத்தை சென்றடைந்து உணவை கொடுத்து பரிசோதிக்க சொல்கிறான்.

அதற்கு அவர்கள் நாளைக்கு வாங்க என சொல்லி அனுப்பி வைக்கிறார்கள். மறுநாள் காலையில் ராதிகா வீட்டில் இருக்கும் கோபி சோகத்தில் அமர்ந்திருந்து எதோ யோசித்து கொண்டிருந்தான். அப்போது ராதிகா பேப்பரில் பாக்யாவின் போட்டோ இருப்பதையும், அத்துடன் தனது பெயர் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியாகி கோபியிடம் காட்டுகிறாள். அதை பார்த்த கோபி விடு கவலைப்படாத பெயர் தான வந்துருக்கு போட்டோ வரலைல, அதுவரைக்கும் சந்தோஷம் என சொல்கிறான். இந்த பக்கம் எழில் மீண்டும் அந்த பரிசோதனை இடத்திற்குச் சென்று ரிசல்ட் வாங்கி வருகிறார்.

கார் விபத்தில் மாட்டிக்கொண்ட ‘பாக்கியலட்சுமி’ ஜெனி – அவரே வெளியிட்ட பதிவு!

அதில் சாப்பாட்டில் எந்த பிரச்சனையும் இல்ல, சாப்பாடு பரிமாறிய லட்டில் தான் பிரச்சனை என கூறுகின்றனர். இதை எழில் வீட்டிற்கு வந்து சொன்னபோது செல்வி நாங்க லட்டு கொடுக்கல வேற ஒருத்தர் தான் கொடுத்தாங்க என சொல்ல உடனே அவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்ததை கூறுகிறான். அதற்கு அவர்கள் அதெல்லாம் கோர்ட்ல பொய் சொல்லுங்க என சொல்லி துரத்தி விட்டனர். இவ்வாறு தனது அம்மாவை எப்படியாவது குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க நினைத்து மேற்கொண்ட முயற்சியில் ஓயாது ஓடி நீதிமன்றத்தில் ஆதாரங்களோடு ரிசல்ட்டை சமர்ப்பிக்கிறான். அதனால் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என சொல்லி விடுதலை செய்தார்கள். பிறகு பாக்கியா விடுதலையாகி வெளியே வந்ததும் தனது இரண்டு மகன்களையும் கட்டி அணைத்து கண் கலங்குகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!