குழந்தைகள் உணவில் விஷம் கலந்தது கோபியா? உண்மையை கண்டுபிடிக்கும் எழில் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகாவும் கோபியும் அனாதை குழந்தைகளுக்கு சாப்பாடு ஆர்டர் செய்ய அதை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடம்பு சரி இல்லாமல் போகிறது. அதனால் போலீஸ் கேஸ் ஆகிவிடுகிறது. இந்நிலையில் இதெற்கெல்லாம் கோபி தான் காரணமாக இருப்பார் என எழில் கண்டுபிடித்துவிடுகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா சேர்ந்து அனாதை குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடிவு செய்கின்றனர். ராதிகா கோபிக்கு தெரியாமல் பாக்கியாவிடம் ஆர்டர் கொடுக்கிறார். பாக்கியா அதை சமைத்து கொண்டு வந்து கொடுக்க கோபி தன்னை பார்த்துவிட கூடாது என்பதால் பாக்கியாவை மருத்துவமனைக்கு போக சொல்கிறார். பின் ராதிகா பாக்கியா வீட்டிற்கு போவோம் என சொல்ல கோபி அதில் இருந்து எப்படி தப்பிப்பது என தெரியாமல் இருக்கிறார்.
பாக்கியாவை கைது செய்த போலீசார், உணவில் விஷம் வைத்த கோபி – ‘பாக்கியலட்சுமி’ தொடரில் அடுத்த திருப்பம்!
இந்த சூழ்நிலையில் பாக்கியா சமைத்த உணவை சாப்பிட குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அங்கே போலீஸ் வருகின்றனர். கோபியும் ராதிகாவும் பதட்டத்துடன் இடத்திற்கு செல்ல அங்கே நீங்க கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டதால் தான் இப்படி ஆனது என சொல்கிறார்கள். போலீஸ் அந்த இடத்திற்கு வர பெரும் பரபரப்பு ஏற்படுகிறது. செய்திகளில் அது பற்றி வர செழியன் அதை பார்த்துவிட்டு குடும்பத்தில் அனைவரிடமும் சொல்கிறான்.
அதனால் பாக்கியாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் போகிறது. பாக்கியா நான் சரியாக தான் சமைத்தேன் என சொல்லி கதறி அழுகிறார். அப்போது எழில் வர அவர் அப்பா தான் இப்படி செய்திருப்பார் என்பதை தெரிந்து கொள்கிறார். ஆனால் வெளிப்படையாக இதை சொல்ல முடியாது என்பதால் எப்படி இந்த சூழ்நிலையை சமாளிக்க போகிறார் என்பது பற்றி அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.