உண்மையை ராதிகாவிடம் கூறப்போவதாக மிரட்டும் ராமமூர்த்தி – கொலை செய்ய நினைக்கும் கோபி!

0
உண்மையை ராதிகாவிடம் கூறப்போவதாக மிரட்டும் ராமமூர்த்தி - கொலை செய்ய நினைக்கும் கோபி!
உண்மையை ராதிகாவிடம் கூறப்போவதாக மிரட்டும் ராமமூர்த்தி - கொலை செய்ய நினைக்கும் கோபி!
உண்மையை ராதிகாவிடம் கூறப்போவதாக மிரட்டும் ராமமூர்த்தி – கொலை செய்ய நினைக்கும் கோபி!

கோபியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் ராதிகாவிடம் உண்மையை கூறப் போவதாக கோபியிடம் தாத்தா சண்டை போடுகிறார். இதனால் தாத்தாவை கோபி கொலை செய்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவிடம் எப்போது தான் கோபி மாட்டிக்கொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். ராதிகாவைத் தான் கோபி காதலித்துக் கொண்டு இருக்கிறார் என்கிற விஷயம் ஏற்கனவே கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு தெரியும். ஆனால் பாக்கியாவின் வாழ்க்கையை நினைத்துக்கொண்டு யாரிடமும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்.

கடுப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்கள் – அடுத்த திருப்பம் என்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

ராமமூர்த்தி வீட்டிலுள்ள யாரிடமும் இந்த விஷயத்தைக் கூறவில்லை என்பதால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட கோபியும் ராதிகாவும் ஒரு பார்க்கிற்கு சென்றபோது எழில் கோபி ஏதோ ஒரு பெண்ணுடன் இருக்கிறார் என்பதை மட்டும் கவனித்துவிட்டு ராமமூர்த்தியிடம் கூறுகிறார். கோபியை இதற்கு மேலும் கண்டிக்காமல் விட்டால் பெரிய பிரச்சினையாகி விடும் என பயந்து வீட்டில் பாக்கியாவும் கோபியும் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார்.

ExamsDaily Mobile App Download

ஆனால் ராமமூர்த்தி அந்த வீட்டிற்கு செல்வதற்குள் ராதிகா வீட்டை காலி பண்ணி வேறு வீட்டிற்கு சென்று விட்டார். தற்போது கூட பாக்கியா காவல் நிலையத்தில் இருந்த போது உதவிக்கு வரவே இல்லை. பின்பு, கோபி எதுவுமே நடக்காதது போல வீட்டிற்கு வந்த போது கோவத்தில் ராமமூர்த்தி நீ இவ்வளவு நேரம் ராதிகாவுடன் தானே இருந்தாய் என கேட்டு கோபியிடம் சண்டையிடுகிறார். பின்பு, ராமமூர்த்தி கண்டிப்பாக உண்மையை ராதிகாவிடம் கூறுவேன் என கூறுகிறார். ராமமூர்த்தி உயிரோடு இருந்தால் மட்டுமே ராதிகாவிடம் உண்மையை கூறுவார் என நினைத்து ராமமூர்த்தியை கொலை செய்வது போல ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!