மயூராவிற்காக கோபியை திருமணம் செய்ய சொல்லும் ராதிகாவின் அம்மா – “பாக்கியலட்சுமி” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகாவுக்கு உண்மை எல்லாம் தெரிந்துவிட்டதால் அவர் பாக்கியாவிற்கு துரோகம் செய்ய வேண்டாம் என நினைக்கிறார். ஆனால் ராதிகாவின் அம்மா மயூரா கோபியை அப்பா போல நினைத்ததால் சுயநலமாக இருக்க சொல்கிறார் இது குறித்து ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கதைக்களம் தற்போது சூடுபிடித்துள்ளது. கோபி இதுவரை ஏமாற்றிய நிலையில் அவரை பற்றிய உண்மை எல்லாம் ராதிகாவுக்கு தெரிய வந்துள்ளது. பாக்கியா தான் கோபியின் மனைவி என தெரிந்து ராதிகாவால் கோபியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாக்கியாவின் நல்ல மனசிற்கு அவருக்கு துரோகம் செய்வது பிடிக்காமல் இருக்கிறது. அதனால் கோபியை விட்டு விலக முடிவு செய்கிறார். கோபி வந்து பேச ஆனால் ராதிகா கோவமாக வெளியே போக சொல்கிறார்.
முருகன் வீட்டில் தஞ்சமடையும் கதிர் & முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
இந்நிலையில் கோபியை நினைத்து மயூராவும் ராதிகாவும் வருத்தமாக இருக்க அப்போது ராதிகாவின் அம்மா ஊரில் இருந்து வருகிறார். அவர் மயூரா குரல் ஏன் சோகமாக இருந்தது அவளை நீ ஏன் அடித்தாய் என கேட்க அப்போது அழுது கொண்டே ராதிகா உண்மையை சொல்கிறார். கோபி தன்னை ஏமாற்றியதாக சொல்ல அப்போது ராதிகாவின் அம்மா நான் அப்பவே பார்த்து பழக சொன்னேன் இப்போ பார் அவர் உன்னை திருமணம் செய்ய மாட்டேன் என சொல்கிறாரா என கேட்கிறார்.
Exams Daily Mobile App Download
அதற்கு டீச்சர் தான் அவருடைய மனைவி என்ற உண்மையை கோபி என்னிடம் மறைத்துவிட்டார் என ராதிகா சொல்ல, அவ்வளவு தான அவங்க நல்லவர்களா கெட்டவர்களா என்பது எனக்கு தெரியாது, மயூராவின் மனதில் கோபி தான் அப்பா என சொல்லியாச்சு, அடுத்தவர்களுக்காக அந்த பிஞ்சு மனசை ஏமாற்ற முடியாது ஒழுங்காக கோபியை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள் என ராதிகாவின் அம்மா சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.