விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஜெனி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – செல்லம்மா ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் தொலைக்காட்சியில் பிற்பகல் 2 மணிக்கு செல்லம்மா என்கிற புத்தம்புதிய நெடுந்தொடர் மே 9-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. அதாவது கணவனை பிரிந்து வாழும் ஒற்றைப் பெற்றோரின் வாழ்க்கையை பற்றிய கதைக்களமாக இந்த சீரியல் இருக்கப்போகிறது.
செல்லம்மா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகின்றன. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கும் பாசப் போராட்டங்கள், வீட்டு பிரச்சினைகள் என அனைத்தையுமே இந்த விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் படம் போட்டுக் காட்டுவதால் இந்த சீரியல்களை மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான் டிஆர்பி மதிப்பீட்டிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் மே 9ஆம் தேதி முதல் பிற்பகல் 2 மணிக்கு செல்லம்மா என்கிற புதிய நெடுந்தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடரில் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வந்த திவ்யா கணேசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது ஒரு பணக்கார வீட்டில் வேலைக்காரப் பெண்ணாக செல்லம்மா இருந்துவருகிறார். கணவனை பிரிந்து வாழும் செல்லம்மாவிற்கு என்னென்ன துயரங்கள் ஏற்படுகின்றன மற்றும் தனது ஒரு மகளை படிக்க வைத்து எப்படி கரைசேர்க்க போகிறார் என்பதுதான் செல்லம்மா நெடுந்தொடரில் முக்கிய கருத்தாகும்.
Exams Daily Mobile App Download
செல்லம்மா தனது குழந்தைக்காக மட்டுமே அந்த வீட்டில் வேலைபார்த்து வருகிறார். அவ்வப்போது செல்லம்மாவின் கணவர் அந்த வீட்டிற்கு வந்து தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கும்படி பிரச்சினை செய்து வருகிறார். இத்தனை பிரச்சினைகளுக்கும் நடுவே எவ்வாறு தனது குழந்தையை செல்லம்மா காப்பாற்றப் போகிறார், அந்த குழந்தையை கரைசேர்க்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். செல்லமா சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையிலேயே எக்கச்சக்கமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.