எழில் அம்ரிதாவை காதலிப்பதை குடும்பத்தினரிடம் போட்டுடைத்த செழியன் – ப்ரோமோ ரிலீஸ்!
அம்ரிதா விதவை என்பது தெரிந்தும் கூட எழில் அம்ரிதாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார். இந்நிலையில், எழில் அம்ரிதாவை திருமணம் செய்துகொள்ள போகிறார் என செழியன் குடும்பத்தினர்கள் அனைவரிடமும் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கோபி திருமணம் செய்துகொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். எப்போதுமே வீட்டில் வேலை வேலை என சொல்லிவிட்டு ராதிகா வீட்டிற்கே கோபி சென்று விடுகிறார். வீட்டிற்கு தெரியாமல் ராதிகாவை எப்படி சந்திப்பது என சூழ்ச்சி செய்ய மட்டும் தான் கோபிக்கு தற்போதெல்லாம் நேரம் இருக்கிறது.
பாக்கியா கண்ணுக்கு முன்னாடி தவறு செய்தும் கூட பாக்கியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. ராதிகாவைத் தான் கோபி திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்கிற விஷயம் ஏற்கனவே கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு தெரியும். ஆனால், பாக்கியாவிற்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்துவிட்டால் பாக்கியா தாங்கிக்கொள்ள மாட்டார் என பயந்து ராமமூர்த்தி கோபியை கண்டித்து மட்டும் விட்டுவிடுகிறார். ஆனாலும் கோபியின் ஆட்டம் அடங்குவதாக தெரியவில்லை. முழுக்க முழுக்க ராதிகாவுடன் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
Exams Daily Mobile App Download
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் எழில் அம்ரிதாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார். என்ன தான் அம்ரிதா கணவனை இழந்த பெண் என்று தெரிந்தாலும் கூட அம்ரிதாவை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என எழில் நினைக்கிறார். தற்போது எழில் அம்ரிதாவை காதலிக்கிறார் எனவும், திருமணம் செய்துகொள்ள போகிறார் எனவும் செழியன் குடும்பத்தினர்கள் அனைவரிடமும் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.