ராதிகா, பாக்கியாவிடம் வசமாக மாட்டிக் கொண்ட கோபி – “பாக்கியலட்சுமி” சீரியல் கதையில் வரும் திருப்பங்கள்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் மகா சங்கமம் முடிவுக்கு பின் கோபி ராதிகாவிடமும், பாக்கியாவிடமும் வசமாக மாட்டிக் கொண்டு இருக்கிறார். இதனால் கோபி குடும்பத்தை பார்க்க வேண்டும் என ராதிகா சொல்ல, பாக்கியா ராதிகாவை ஏன் பார்க்க பயப்படுகிறீர்கள் என கோபியை கேள்வி கேட்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தாவின் பிறந்தநாளுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வர அப்போது கோபியின் எல்லா வேலைகளையும் மூர்த்தியும் தனமும் கண்டுபிடித்து விடுகின்றனர். இந்நிலையில் பாக்கியாவிடம் உண்மையை சொல்லும் அளவிற்கு அவர்களுக்கு தைரியம் இல்லாமல் இருக்க ராதிகாவிடம் நீங்க கோபியின் குடும்பத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என சொல்கின்றனர். மேலும் பாக்கியாவிடம் தனம் வருத்தப்பட்டு பேச அதனால் பாக்கியா குழப்பத்தில் இருக்கிறார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை!
இன்றைய எபிசோடில் கோபி ராதிகா வீட்டிற்கு செல்ல கோபியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என சொல்கிறார். ஆனால் கோபி எவ்வளவோ சொல்லி சமாளிக்க ஆனால் ராதிகா கண்டிப்பாக குடும்பத்தை பார்க்க வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார். கோபி வசமாக மாட்டிக் கொண்டோம் என நினைத்து ராதிகாவிடம் பல விஷயங்களை சொல்லி சமாளிக்கிறார். ஆனால் நாளை உங்களது குடும்ப புகைப்படத்தை பார்க்காமல் இருந்தால் உங்களுடன் நான் பேசவே மாட்டேன் என ராதிகா சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
மறுபக்கம் பாக்கியா தனம் சொன்னதை நினைத்து எழிலிடம் வருத்தப்படுகிறார். எழில் அப்பாவை இவ்வளவு நம்பாதே என சொல்ல, பாக்கியாவிற்கும் சந்தேகம் வருகிறது. ராதிகாவை ஏன் பார்க்காமல் இருக்கீங்க அவரை பார்க்க ஏன் பயப்படுறீங்க என பல கேள்விகளை பாக்கியா கோபியிடம் கேட்க போகிறார். அதனால் கோபி விரைவில் சிக்கப் போகிறார் என்பது உறுதியாக தெரிகிறது. எனவே பாக்கியலட்சுமி சீரியல் கதையில் பெரிய திருப்பம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.