கோபி பற்றிய உண்மையை கண்டுபிடித்த பாக்கியா – சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!
ராதிகாவிற்கு கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் தற்போது தான் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், பாக்கியாவிற்கும் கோபியை பற்றிய உண்மைகள் தெரியவந்து கோபியுடன் சண்டை போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலக்ஷ்மி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலக்ஷ்மி தொடரில் தற்போது தான் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் ராதிகாவிற்கு தெரியவந்திருக்கிறது. இத்தனை நாட்களாக பாக்கியா மற்றும் ராதிகா ஆகிய இருவரின் கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டு இருவரையுமே கோபி ஏமாற்றிக் கொண்டிருந்தார். ராதிகாவிற்கு மட்டுமல்லாமல் பாக்யாவிற்கும் கோபி மீது சிறிய சந்தேகம் வந்திருக்கிறது. அதாவது அவ்வப்போது பாக்கியாவின் பக்கத்திலேயே படுத்துக்கொண்டு ராதிகாவுடன் இரவில் போனில் பேசிக் கொண்டிருப்பதை பாக்கியா கேட்டுவிட்டு லேசாக சந்தேகப்பட்டார்.
விஜய் டிவி “ராஜா ராணி” சீரியல் நடிகை வீட்டில் நடந்த விசேஷம் – ரசிகர்கள் வாழ்த்து!
தற்போது கோபியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் இருப்பதால் கண்டிப்பாக கோபிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பது தெளிவாகிறது. இது மட்டுமல்லாமல் கோபி தலை கால் புரியாமல் நன்றாக குடித்துவிட்டு ராதிகாவிடம் பேசுவது போல அனைத்து விஷயங்களையும் பாக்கியாவிடம் உளறுகிறார். அப்போதும் கோபி மீது ராதிகாவிற்கு சிறிய சந்தேகம் வந்தது. பின்பு, கோபி நம்மை ஏமாற்றமாட்டார் என்கிற குருட்டு நம்பிக்கையில் அப்படியே விட்டுவிட்டார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், கோபியின் காரில் ஒரு பிளவுஸ் தைத்த பில் இருப்பதை பாக்கியா பார்த்துவிட்டு கோபிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதா என யோசிக்க ஆரம்பித்துவிட்டார். உடனே கோபியிடம் வந்து என் வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. இரவில் யார் யாரிடமோ போனில் பேசுகிறீர்கள், திடீரென வீட்டிற்கு குடித்துவிட்டு வருகிறீர்கள், வேறு பெண்ணின் பிளவுஸ் பில் இருக்கிறது. என்ன தான் நடக்கிறது என்கிற உண்மையை இப்போதாவது எனக்கு சொல்லுங்கள் என கோபியிடம் பாக்கியா சண்டை போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ராதிகாவை காதலிக்கும் விஷயத்தை கோபி பாக்கியாவிடம் கூறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.