ராதிகாவை பிரிய மாட்டேன் என சண்டையிடம் கோபி, சண்டை வேண்டாம் என கெஞ்சிய மயூரா – “பாக்கியலட்சுமி” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியின் குடும்பத்தை பற்றி ராதிகாவிற்கு தெரிந்ததால் ராதிகா இனிமேல் இங்கே வராதீங்க என வெளியே போக சொல்கிறார். இந்நிலையில் கோபி ராதிகாவிடம் சண்டையிட இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்தது போல பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மை ராதிகாவுக்கு தெரிந்துள்ளது. அதனால் மனம் வருத்தப்பட்ட ராதிகா என்னால் பாக்கியாவிற்கு துரோகம் செய்ய முடியாது என சொல்லி கோபியை விட்டு விலக முடிவு செய்கிறார். ஆனால் கோபி என்னால் உன்னை விட்டு விலக முடியாது என சொல்லி சண்டை போடுகிறார்.
TNPSC குரூப் 1 தேர்வில் கேள்விகளுக்கான விடைகளில் தவறு – தேர்வாணையம் பதிலளிக்கும் படி உத்தரவு!
ராதிகா பலமுறை வெளியே போக சொல்ல ஆனால் கோபி முடியாது என சொல்கிறார். ராதிகா மயூராவை பிரிந்து சரியாக சாப்பிடாமல் மிகவும் வருத்தப்படுகிறார், அதை கண்டுபிடித்த பாக்கியா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். கோபி எப்படியாவது ராதிகாவை பேச வைக்க வேண்டும் என பிடிவாதமாக இருக்க ஆனால் அது எதுவும் நடக்காமல் இருக்கிறது. இந்நிலையில் கோபி மீண்டும் ராதிகா வீட்டிற்கு வருகிறார்.
Exams Daily Mobile App Download
அப்போது மயூரா வந்து கதவை திறந்துவிட அப்போது கோபி மயூராவை அன்பாக அழைக்கிறார். ஆனால் ராதிகா மயூராவை பேசாதே என உள்ளே போக சொல்கிறார். அதனால் கோபிக்கு கோவம் வர நீயும் மயூராவும் தான் என்னுடைய உயிர் என கோபி சொல்கிறார். ஆனால் நான் டீச்சருக்கு துரோகம் செய்யமாட்டேன் என ராதிகா சொல்கிறார். அதனால் இருவரும் சத்தமாக சண்டையிட மயூரா நீங்களும் என் அப்பா போல அம்மாவிடம் சண்டை போடாதீங்க என சொல்கிறார். அதனால் மனம் வருத்தப்பட்ட கோபி வெளியே செல்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.