கோபி யாரிடம் பேசுகிறார் என பார்க்க பாக்கியா செய்த காரியம் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபிக்கு இரவு அடிக்கடி போன் வருவதை பார்த்து பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது. இந்நிலையில் இரவு கோபிக்கு தெரியாமல் பாக்கியா போர்வை வழியாக சென்று உண்மையை தெரிந்து கொள்ள இருக்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி அழகான குடும்பத்தை ஏமாற்றி ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கிறார். கோபி குடும்பத்தை மட்டுமல்லாமல் ராதிகாவையும் ஏமாற்றி வருகிறார். அது தெரியாமல் ராதிகாவும் பாக்கியாவும் நெருக்கமான நண்பர்களாக பழகி வருகின்றனர். கோபி எப்போது சிக்குவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அது இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை. அதனால் கோபி மீது சந்தேகப்படுவது போல காட்சிகள் வைக்கப்பட்டு வருகிறது.
‘ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்திருக்க வேண்டும்’ – நெருங்கிய நண்பன் திடீர் வாக்குமூலம்!
கோபியும் பாக்கியாவும் ஒரே ரூமில் தூங்குவதால் கோபியால் இரவு ராதிகாவிடம் போன் பேச முடியவில்லை. ராதிகா அடிக்கடி இரவு போன் செய்ய ஆனால் கோபி பாக்கியா தூங்கிவிட்டார் என நினைத்து வெளியே சென்று பேசுகிறார். இரவு தினமும் யார் போன் செய்கிறார் என தெரியாமல் பாக்கியா குழப்பத்தில் இருக்கிறார். பாக்கியா யார் போன் செய்வது என்று தெரிந்து கொள்ளும் முடிவுடன் தூங்காமல் இருக்க அன்றைய தினமும் போன் வருகிறது. அப்போது கோபி போனை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறார்.
Exams Daily Mobile App Download
பாக்கியா எழுந்துவிட கோபி பேசாமல் போனை சுவிட்ச் ஆப் செய்கிறார். அதனால் பாக்கியாவுக்கு சந்தேகம் வருகிறது. கோபி யாரிடம் பேசுகிறார் என கண்டுபிடிக்க வேண்டும் என பாக்கியா இருக்கிறார். அன்று கோபிக்கு ராதிகா மெசேஜ் செய்ய கோபி போர்வைக்குள் இருந்து மெசேஜ் செய்கிறார். அப்போது பாக்கியாவும் போர்வைக்குள் சென்று கோபி யாருக்கு மெசேஜ் செய்கிறார் என பார்க்கிறார். அவை எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.