கோபிக்கு எதிராக திரும்பும் செழியன் – சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!
ராதிகாவை தான் கோபி திருமணம் செய்துகொள்ள போகிறார் என்கிற விஷயம் மூர்த்திக்கு தெரிந்து விடுகிறது. இந்நிலையில், அப்பா ஏதோ தவறு செய்கிறார் என செழியன் சந்தேகப்படும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. ராதிகாவிற்கு எப்போது தான் அனைத்து உண்மைகளும் தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சமயத்தில் தற்போது கோபி மாட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. அதாவது ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் முடிந்ததும் கோபி ராதிகாவிடம் பேசி கொண்டிருப்பதை மூர்த்தி பார்த்துவிடுகிறார். ராதிகா வீட்டிற்கு வந்த போது பேசாத கோபி தற்போது ஏன் தனிமையில் சந்தித்து பேசி கொண்டிருக்கிறார் என மூர்த்திக்கு சந்தேகம் வருகிறது.
சிம்புவை திருமணம் செய்து கொள்ளும் பிரபல சீரியல் நடிகை? வீட்டின் முன்பு தர்ணா!
உடனே இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்காக மூர்த்தியும், தனமும் ராதிகாவின் வீட்டிற்கு செல்கின்றனர். மூர்த்தியிடம், நீங்கள் திருமணம் செய்துகொள்ள போகும் வருங்கால கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள் என ராதிகாவிடம் மூர்த்தி கேட்கிறார். உடனே ராதிகா கோபியின் புகைப்படத்தை எடுத்து மூர்த்தியிடம் நீட்டுகிறார். அந்த புகைப்படத்தினை பார்த்ததும் மூர்த்திக்கு தூக்கி வாரி போட்டு விட்டது. கோபியிடம் இது பற்றி பேசலாம் என மூர்த்தி செல்கிறார். உடனே கோபி கோவம் வந்து வந்த வேலையை மட்டும் பார்த்துவிட்டு கிளம்புங்கள் என சொல்லி சண்டை போடுகிறார்.
Exams Daily Mobile App Download
கோபியின் சுயரூபத்தை மூர்த்தி சொல்லி விடுவார், கோபி மாட்டிக்கொள்ள போகிறார் என எதிர்பார்த்த சமயத்தில் மூர்த்தியை எதுவும் பேச விடாமல் தனம் தடுக்கிறார். கோபி தான் எப்படியும் தவறு செய்திருப்பார் என நினைத்து பாக்கியலட்சுமி குடும்பத்தில் உள்ள அனைவரும் மூர்த்தியிடம் மன்னிப்பு கேட்கின்றனர். எப்போதும் கோபிக்கு சப்போர்ட் செய்யும் செழியனும் கோபி மீது கோவப்படுகிறார். செழியனுக்கும் கோபி மீது சந்தேகம் வருகிறது. எதற்காக அப்பா அடிக்கடி பதட்டப்படுகிறார். ராதிகாவை சந்திக்க ஏன் பயப்படுகிறார் என சந்தேகப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.