கோபி போனை எடுத்து பேசிய பாக்கியா, அதிர்ச்சியில் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா தற்போது 1 மணி நேரத்தில் 100 உணவுகளை சமைத்து உலக சாதனை செய்ய இருக்கிறார். இந்நிலையில் பாக்கியா இதை நல்லபடியாக செய்து முடிக்க பெரிய திருப்பம் ஒன்று வர இருக்கிறது. அதாவது ராதிகா கோபிக்கு போன் செய்ய அதை பாக்கியா எடுக்க போகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியா மீண்டும் தொழிலை தொடங்க வேண்டும் என்பதால் விளம்பரம் வேண்டும் என நினைக்கிறார். அதற்காக எழில் ஒரு ஐடியா சொல்கிறார். அதன் படி பாக்கியாவை 1 மணி நேரத்தில் 100 உணவுகளை சமைத்து உலக சாதனை செய்ய வேண்டும் என சொல்கிறார். ஆனால் முதலில் தயங்கிய பாக்கியா என்னால் செய்ய முடியும் என சொல்கிறார். பாக்கியாவால் இதை செய்ய முடியாது என கோபி அடிக்கடி சொல்ல ஆனால் பாக்கியா அதை செய்ய போகிறார்.
பிரசவத்திற்கு பின் நடிகை ஆலியா மானசா சொன்ன செய்தி – ரசிகர்கள் வாழ்த்து!
இன்றைய எபிசோடில் பாக்கியா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சமைக்கிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெறுவாரா என அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். பாக்கியா இந்த முயற்சியில் வெற்றி பெற அவருக்கு பல புகழ் கிடைக்கிறது. அதனால் பாக்கியாவின் தொழில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்குகிறது. பாக்கியா பழையபடி தொழிலை செய்ய தொடங்குகிறார். இந்நிலையில் சீரியலில் மிகப்பெரிய திருப்பம் ஒன்று வர இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதாவது கோபியும், பாக்கியாவும் இப்போது ஒரே ரூமில் தூங்க அப்போது நடு ராத்திரியில் கோபிக்கு போன் வருகிறது. கோபி அசந்து தூங்க அதை பாக்கியா எடுத்து பேசுகிறார். பாக்கியாவின் குரல் கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகிறார். என்ன டீச்சர் கோபியின் போன் உங்களிடம் எப்படி வந்தது என ராதிகா கேட்க பாக்கியா உண்மையை சொல்வாரா என்பது எல்லாம் இனி வரப்போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது. அதனால் இனி வரும் எபிசோடுகள் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.